search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலிதா மரணம்"

    • தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 30 கிலோ தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.
    • கர்நாடக அரசு வசம் உள்ள தங்க நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு தனிக்கோர்ட்டு ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனிக்கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீா்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. மற்ற 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

    இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 30 கிலோ தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர். ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை கைப்பற்றினர். அந்த தங்க நகைகள் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த மனு அந்த சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி மோகன், இந்த வழக்கின் செலவு தொகை ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், அதை வங்கி வரைவோலையாக (டி.டி.) வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் கர்நாடக அரசு வசம் உள்ள தங்க நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவற்றை பெற தமிழக போலீஸ் துறை முதன்மை செயலாளர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவற்றை ஏலம் விட்டு அபராதத்தை செலுத்த வேண்டும், வழக்கில் தொடர்புடைய நிலத்தின் மதிப்பை விரைவாக தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற பிப்ரவரி மாதம் 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, "ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதில் எனக்கு உடன்பாடில்லை.

    நான் கர்நாடக அரசின் சட்டத்துறையை அணுகி, இந்த உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யுமாறு வற்புறுத்த முடிவு செய்துள்ளேன். வழக்கு விசாரணை இங்கு நடைபெற்று கொண்டிருக்கும்போது, இங்கு தான் அந்த பொருட்களை ஏலம் விட வேண்டும்" என்றார்.

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.
    • விசாரணை முடிவில் 608 பக்கம் கொண்ட இறுதி அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது.

    சேலம்:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என்று விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.

    இதையடுத்து, 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் வழக்கறிஞர் தமிழ்மணி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியதற்கு, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்ததாவது:

    நான் அறிக்கை கொடுத்து 4 மாதங்களுக்கு மேலாகிறது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஒரு கட்சியின் தலைவரின் மரணம் என்பதால், இதுபோன்ற கேள்விகள் எழுகிறது. எனது அறிக்கையில் என்னால் முடிந்தது என்னவோ, கிட்டத்தட்ட எந்த சந்தேகமும் இல்லாமல் வழங்கியதால்தான் எந்தவித சர்ச்சையும் எழவில்லை. இந்த அறிக்கை குறித்து எந்தெந்த, என்னென்ன சந்தேகம் எழுந்ததோ, அதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக அந்த அறிக்கையில் நான் நிறைய எழுதியுள்ளேன். என்னுடைய அறிக்கையில் மருத்துவர்கள் சாட்சியம் அளித்ததை வைத்துதான் சொன்னேன். இன்னும் சொல்ல போனால் நான் எதையுமே அதிகமாக எழுதவில்லை. காரணம் இது மருத்துவம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. நான் எனது கருத்து என எதையும் சொல்லவில்லை.

    நீங்கள் கூறியதில் திருத்தம் உள்ளது. அதாவது ஜெயலலிதாவை சிபிஆர் செய்தது மருத்துவரோ நர்சோ இல்லை, அறுவை சிகிச்சை அறையில் பணியாற்றும் நபர்கள்தான். எம்பார்மிங் செய்ய கடிதம் கொடுத்தது இன்னொருவர். அவர் யார் என நான் சொல்ல முடியாது. எய்ம்ஸ் மருத்துவ ஆணையத்தை தவிர வேறு யாருக்குமே தனியாக கருத்து சொல்ல முடியாது என தெரிவித்தார்.

    • ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த பரிந்துரை
    • மாநில காவல்துறையை நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காது என மனுதாரர் கூறி உள்ளார்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் குழு அமைத்து கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    ஐந்து ஆண்டுகள் விசாரணைக்கு பின், ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைத்தது.

    இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியம் இருப்பதாகவும், வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, முழுமையாக நியாயமாக விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக அரசின் உயரதிகாரிகள், அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், மாநில காவல்துறையை விசாரிக்க நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காமல், உண்மை நீர்த்துப்போகும் என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு மனு அளிக்க வேண்டும் என்றும், மனு அளிக்காமல் தாக்கல் செய்யபட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • 25 வருடமாக பழகி வந்த சசிகலாவை பணிப்பெண்ணாக மட்டுமே ஜெயலலிதா உடன் அழைத்து சென்றாரே தவிர, ஒருபோதும் மேடை ஏற்றியது கிடையாது.
    • ஜெயலலிதாவை சந்திப்பதற்காக ஆஸ்பத்திரி வாசலில் தவம் கிடந்தேன். ஆனால் பார்க்கவிடவில்லை.

    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். ஏனெனில் ஆறுமுகசாமி ஆணையமே மேல் விசாரணை தேவை என்று பரிந்துரை செய்து இருக்கிறது. சசிகலாவால் கட்டுப்படுத்தப்பட்ட அ.தி.மு.க. இருந்ததால், அன்றைய காலக்கட்டத்தில் அது சாத்தியமாகவில்லை. அதனால் விசாரணையை முறையாக நடத்துவதற்கும் முன்வரவில்லை. இந்த விவகாரத்தை ஒட்டுமொத்தமாக அரசியல் காய் நகர்த்தலாகத்தான் பார்க்க முடிகிறது. ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதா என்பதிலேயே சர்ச்சை எழுந்தது.

    அதில் இருந்து இந்த விவகாரம் விசாரிக்கப்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டு. அத்தை (ஜெயலலிதா) தனி நபராக வாழ்ந்தபோது, சசிகலாவின் குடும்பம் ஒட்டுமொத்தமாக அவருடன் இருந்தது. ரத்த சொந்தங்களோ, தூரத்து உறவினர்களோ அவருடன் இல்லை. யாரையுமே சசிகலா குடும்பம், ஜெயலலிதாவுடன் நெருங்கவும், கூட இருக்கவும் விடவில்லை. ஜெயலலிதாவை சுற்றிலும் சதித்திட்டம் இருந்ததை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த சதித்திட்டத்தை எப்படியாவது செயல்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது முதல் கொடுக்கப்பட்ட தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தினத்தன்று எப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது?, தமிழக முதல்-அமைச்சராக இருந்த அவருக்கு மிகப்பெரிய பாதிப்பு இருந்திருந்தால் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஜெயலலிதாவுடன் இருந்த அதிகாரிகளுக்கும், கட்சியை சேர்ந்த அடுத்தக்கட்ட தலைவர்களுக்கும், அவருடன் இருந்த சசிகலா குடும்பத்தினருக்கும் இருக்கிறது. ஆனால் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு இருந்ததாக எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை.

    அப்படியிருக்கும்போது, ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் இருந்ததாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். அப்படி இல்லை என்றால் உடல்நலக்குறைவு இருந்ததை ஏன் மறைத்தீர்கள்?. ஜெயலலிதாவுக்கு பெரிய நோய்கள் எதுவும் இருந்ததாக சொல்லவில்லை. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு வரை முதல்-அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். அப்படி ஏதாவது இருந்திருந்தால், அதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அன்றைக்கு இருந்த அ.தி.மு.க. அரசுக்கும், ஜெயலலிதாவுடன் வசித்த சசிகலா குடும்பத்துக்கும் இருந்தது. 2 பேருமே அதனை செய்ய தவறி விட்டார்கள்.

    ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளை சசிகலா குடும்பம் பலவீனமாக கருதியது. அதை மையமாக வைத்து சசிகலா குடும்பம் என்ன செய்தார்களோ, எப்படி பயன்படுத்திக்கொண்டார்களோ தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டார்கள்.

    25 வருடமாக பழகி வந்த சசிகலாவை பணிப்பெண்ணாக மட்டுமே ஜெயலலிதா உடன் அழைத்து சென்றாரே தவிர, ஒருபோதும் மேடை ஏற்றியது கிடையாது. ஆனால் ஆட்சி அதிகாரம், பதவி மேல் ஆசை இருந்ததை சசிகலா குடும்பமே பல இடங்களில் தெரிவித்து இருக்கிறது.

    ஜெயலலிதாவை சந்திப்பதற்காக ஆஸ்பத்திரி வாசலில் தவம் கிடந்தேன். ஆனால் பார்க்கவிடவில்லை. ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே சசிகலா அதிகார மையமாக மாறிவிட்டார்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர்தான் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்ததா? அல்லது அதற்கு முன்பே பிரிந்துவிட்டதா? என்பதில் சர்ச்சைகளும், சந்தேகமும் இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் சந்தேகமாக இருக்கிறது. முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவை, போலீசாரின் உதவி இல்லாமலும், யாரிடமும் தெரிவிக்காமலும் சசிகலாவும், அவர் உடன் இருந்தவர்களும் ஆம்புலன்சில் அழைத்து சென்றது ஏன்?. எந்த மாதிரியான உடல்நலக்குறைவு அவருக்கு இருந்தது?. என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது?.

    வெளிநாட்டு சிகிச்சைக்கு செல்வதை தடுத்தது யார்? ரத்த உறவுகளான என்னிடமும், தீபக்கிடமும் (தீபாவின் சகோதரர்) தெரிவிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்தது யார்? என்ற பல சந்தேகங்கள் இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2012 பொதுக்கூட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை தொடர்பு கொள்ள வேண்டாம் என கட்சி உறுப்பினர்களை ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
    • உறுதிமொழி கடிதத்தில் அடிப்படையில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

    * 2012 பொதுக்கூட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை தொடர்பு கொள்ள வேண்டாம் என கட்சி உறுப்பினர்களை ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

    * உறுதிமொழி கடிதத்தின் அடிப்படையில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

    * சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியாவின் சாட்சியத்தின்படி சசிகலாவிற்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே நல்லுறவு இல்லை.

    * சாட்சியங்கள் அளித்த தகவலின்படி, ஜெயலலிதா 4.12.2016 அன்று மாலை 3 மணியில் இருந்து 3.50 மணிக்குள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    * 5.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லை.
    • ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், ஜெயலலிதாவை வீட்டில் இருந்து மருத்துவமனையில் அனுமதித்த நபர்களிடம் அசாதாரணமான செயல் எதுவும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அறிக்கையில், சசிகலா, கே.எஸ்.சிவக்குமார், ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்பட்டு உள்ளது.

    ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் சசிகலா குற்றம் செய்தவராக முடிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.




    அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் ஸ்டூவர்ட் ரசல், ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ஒருவேளை அது நடந்திருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றியிருக்கலாம்.

    2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை, ஜெ-வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றுள்ளனர்.

    அதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதா இறந்த நாள் இறந்த நேரத்தில் முரண்பாடு உள்ளது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள்.

    2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிச. 4ம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
    • ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 14 முறை அவகாசம் கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 157 பேரிடம் விசாரணை நடத்தியது. ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.

    இதையடுத்து, இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியில் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை ஆவணங்களை ஆய்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது.

    அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணைம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது.

    இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், 5 ஆண்டு விசாரணைக்கு பின் அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறது.

    சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார்.

    3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் 14 முறை ஆணையத்திற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.

    • ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்து விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணியும் முடிவடைந்துள்ளது.
    • ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் இறுதி அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நாளை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டர்.

    முதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதமாக நிர்ணயிக்கப்பட்டது.

    விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் அவருடன் உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ நிர்வாகம், டாக்டர்கள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வந்தது.

    குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் 2017 டிசம்பர் 24-ந் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு ஆணையத்தின் கால அவகாசத்தை தமிழக அரசு முதன் முதலாக நீட்டித்தது.

    அதன்பிறகு அடுத்தடுத்து ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்தது.

    விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. அந்த சமயத்தில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

    அந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த இடைக்கால தடையும் விதித்தது.

    அதன்பிறகு மருத்துவ குழுவை அமைத்து விசாரணையை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவ குழுவை எய்ம்ஸ் நியமித்தது.

    இதன் பிறகு தான் மீண்டும் விசாரணை துரிதமாக நடைபெற்றது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு 3 பக்க அறிக்கையை அளித்தது. அதில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித தவறுகளும் இல்லை. உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.

    ஒருவழியாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்து விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணியும் முடிவடைந்துள்ளது.

    எனவே ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் இறுதி அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நாளை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் உள்ள தகவல்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும்.

    • ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • இறுதி அறிக்கையை ஆகஸ்டு மாதத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவக்குழு தெரிவித்தது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், சசிகலா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும் இன்னும் விசாரணை முடியவில்லை.

    இதனால் ஆணையத்தின் விசாரணை காலத்தை ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 3 வார கால அவகாசம் கேட்டுள்ளது.

    ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த குழுவினர் பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன் இறுதி அறிக்கையை ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்ய இருப்பதாக ஆணையத்திற்கு எய்ம்ஸ் மருத்துவக்குழு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை என எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பக்க அறிக்கையை அளித்துள்ளது.

    மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை அளித்துள்ளது. அதில், ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா தைராய்டு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவ குழு அமைத்து விசாரணை.
    • கூடுதல் அவகாசம் கேட்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்தது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், சசிகலா உள்ளிட்ட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும்இன்னும் விசாரணை முடிவுக்கு வரவில்லை. இதனால் ஆணையத்தின் விசாரணை காலத்தை ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தர விட்டது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது.

    இந்தநிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவ குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த குழுவினர் பலரிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    இதன் இறுதி அறிக்கை இந்த வாரத்தில் தாக்கல் செய்ய எய்ம்ஸ் மருத்துவ குழு ஆணையத்திடம் தகவல் தெரிவித்து இருந்தது. இதையடுத்து கூடுதல் அவகாசம் கேட்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து முடிக்க மேலும் 3 வார காலம் அவகாசம் வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    இதனால் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியாவதில் தாமதமாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    • ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
    • இறுதி அறிக்கையை ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக ஆணையத்திற்கு எய்ம்ஸ் மருத்துவக்குழு தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், சசிகலா உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும் இன்னும் விசாரணை முடியவில்லை. இதனால் ஆணையத்தின் விசாரணை காலத்தை ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த குழுவினர் பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன் இறுதி அறிக்கையை ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக ஆணையத்திற்கு எய்ம்ஸ் மருத்துவக்குழு தெரிவித்து உள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 2 மாதத்தில் கொடநாடு சம்பவம் தொடர்பாக உடனடியாக போர்க்கால அடிப்படையில் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்தினார்.
    • அந்த குற்றவாளிகள் கேரளா, கர்நாடகாவில் கொடும் குற்றங்கள் புரிந்தவர்கள்.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அம்மா கட்டிக்காத்த நெறிமுறைகளின்படி முறையாக நடைபெற்றது. அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    பொதுக்குழு உறுப்பினர்களில் 98 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒற்றை தலைமை வேண்டும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என ஒருமித்த குரலில் ஒலித்தனர்.

    நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், சட்டப்படியும், எம்.ஜி.ஆர். வகுத்து தந்த சட்ட விதிமுறைகளின் படியும் பொதுக்குழு நடைபெற்றது.

    அ.தி.மு.க. சட்டத்திட்ட நெறிமுறைகள்படி எங்கள் பக்கம் முழுமையான நியாயம் இருக்கும் நிலையில் நிச்சயமாக நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும். மேலும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப்பற்றி பேசக்கூடாது.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 2 மாதத்தில் கொடநாடு சம்பவம் தொடர்பாக உடனடியாக போர்க்கால அடிப்படையில் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்தினார். அந்த குற்றவாளிகள் கேரளா, கர்நாடகாவில் கொடும் குற்றங்கள் புரிந்தவர்கள்.

    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். அவர்களை காவல்துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி விரைந்து கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தினார். அவர்களை தி.மு.க. தான் ஜாமினில் எடுத்தது.

    சசிகலாவும், அவரை சார்ந்தவர்களும் எந்த நிலையிலும் கட்சியில் வரக்கூடாது. அம்மாவின் மரணத்துக்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார்.

    ஆனால் டி.டி.வி.தினகரனை, ஓ.பன்னீர் செல்வம் மறைமுகமாக சந்தித்தார். அம்மாவின் மரணம் குறித்து ஒரு உண்மை நிலையை தெரிய வேண்டும் என்பதற்காக நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அமைத்தார். ஆனால் அந்த ஆணையத்தில் சென்று சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் நல்ல சான்றிதழ் அளிக்கிறார். அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார். அதன் பிறகு அம்மாவின் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என்று கூறுகிறார்.

    ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்கும் போது அர்ப்பணிப்போடு முதல்-அமைச்சர் செயல்படுகிறார் என்ற கருத்தை முன்மொழிந்தார். கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தில் இருந்து தமிழ்நாடு விடுபட வேண்டும் என்று தான் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார்.

    தி.மு.க. எதிர்ப்பு கொள்கையை கட்சிக்காரர்களுக்கு ஊட்டி வாழ்நாளெல்லாம் கடைபிடித்தார். புரட்சி தலைவியும் வாழ்நாள் முழுவதும் தி.மு.க. எதிர்ப்பு கொள்கையை எடுத்தார். அவர்களின் எண்ணங்களுக்கு மாறாக ரவீந்தரநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×